/indian-express-tamil/media/media_files/2025/10/25/desiya-thalaivar-movie-pil-2025-10-25-08-04-10.jpg)
'தேசியத் தலைவர்' படத்திற்கு எதிர்ப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் 'தேசியத் தலைவர்' என்ற வரவிருக்கும் திரைப்படத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளுக்குப் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அதிகாரிகளுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவருமான எம். சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சி. குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
சக்கரவர்த்தி தனது மனுவில், "முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படம், ஏற்கெனவே சுமூக உறவில் இல்லாத பல்வேறு சமூகங்களிடையே சமூக நல்லிணக்கத்தை அழித்து, பிளவை உருவாக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன" என்று தெரிவித்தார். எனவே, திரைப் படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மனுதாரர் வலியுறுத்தினார். இந்த வழக்கை நீதிமன்றம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார் என்பவரும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், "இந்தத் திரைப்படம் வெளியாவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் தீவிரமான வாய்ப்புள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திரைப்படத்தை வெளியிடவோ அல்லது வெளியிட அனுமதிக்கவோ கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரி உள்ளார். மேலும், திரைப்படத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு முன், அதை மறுபரிசீலனை செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழுவை அமைக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us