Advertisment

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முக்கிய ஆதாரங்களுக்காக காத்திருக்கும் தமிழக போலீசார்!

தமிழக காவல்துறையில் உள்ள புலனாய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வர சில முக்கிய ஆதாரங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
Coonoor helicopter crash

Coonoor helicopter crash: Tamil Nadu police waiting for key evidence!

ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும், குன்னூரில் நடந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்த விவரங்களுக்காக தமிழக காவல்துறை காத்திருக்கிறது.

Advertisment

டிசம்பர் 8, 2021 அன்று, Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்தது, இந்த விபத்தில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். கோவை சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து குன்னூர் கிராம நிர்வாக அலுவலர் சி.அருள் ரெத்னா அளித்த புகாரின் பேரில், மேல் குன்னூர் போலீஸார்’ குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முப்படைகள் நீதிமன்ற முதற்கட்ட விசாரணையில், வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால், ஹெலிகாப்டர் மேகங்களுக்குள் நுழைந்த பிறகு, விமானியின் இடஞ்சார்ந்த திசைதிருப்பலுக்கு வழிவகுத்து, விபத்து நடந்ததாக கூறியது.

ஆனால் தமிழக காவல்துறையில் உள்ள புலனாய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வர சில முக்கிய ஆதாரங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

மூத்த போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, விசாரணை அதிகாரி சூலூர் விமான தளத்திற்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் விமானிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் நகலை கேட்டுள்ளார்.

முன்னறிவிப்பு’ சீரற்ற காலநிலையை சுட்டிக்காட்டியிருந்தாலும், விமானத்தை முன்னெடுத்துச் செல்ல யார் முடிவு செய்தார்கள் என்பதையும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கும், விமானியுக்கும் இடையிலான கடைசி வானொலி தகவல்தொடர்பு விவரங்களையும் போலீசார் அறிய முயன்றனர்.

இந்திய வானிலை மைய ஆதாரம்!

 “ஹெலிகாப்டர் விமானப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்க வேண்டிய சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தும் விவரங்களை நாங்கள் கேட்டுள்ளோம். இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் விமானத்திற்கான வானிலை அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்று கூறியதை அடுத்து, அந்த நாளுக்கான செயற்கைக்கோள் படங்களையும் (டிசம்பர் 8, 2021) வானிலை பற்றிய அவர்களின் கருத்தையும் நாங்கள் கேட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூலூர் விமானப்படை தளத்திலும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியிலும் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இரண்டு கான்வாய்களை தமிழக போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

வி.ஐ.பி., சாலை வழியாகப் பயணம் செய்யத் தேர்வு செய்தால், அவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்பட்டன. நெறிமுறைகளின்படி தற்செயல் பாதையில் பாதுகாப்புப் பணியாளர்களும் நிறுத்தப்பட்டனர்.

"நாங்கள் ஹெலிபேடை ஒட்டிய வனப்பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் மற்றும் தரையிறங்கும் பகுதியிலும் நாசவேலை எதிர்ப்பு சோதனைகளை மேற்கொண்டோம். 

ஆனால் நாசவேலையை நிராகரிக்கவும், விசாரணையை முடிக்கவும், நாங்கள் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டரை பகுப்பாய்வு செய்ய வேண்டும், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

நஞ்சப்பசத்திரத்தில் விபத்து நடந்த இடத்தை முதலில் பார்வையிட்ட பல சாட்சிகள் மற்றும் உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியவர்களின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

”சில சிக்கல்களுக்கு தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து கூடுதல் தெளிவு மற்றும் உறுதிப்படுத்தல் தேவை, இது விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய எங்களுக்குத் தேவைப்படுகிறது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment