மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் லாரி ஒன்று பஞ்சர் ஆகி சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரி டிரைவரை அழைத்து லஞ்சம் கேட்டுள்ளனர்.
உடனே டிரைவர் நூறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதற்கு அந்த போலீஸ்காரர், ‘அரைபாடி லாரி டிரைவர் 500 ரூவா கொடுக்குறாங்க. கண்டிப்பா நீ 1000 ரூவா கொடுக்க வேண்டும்’ என்கிறார்.
என்னிடம் பணம் இல்லை என்று டிரைவர் கூறியும், அவருடன் போலீசார் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார். இதனையடுத்து, அந்த டிரைவர் புலம்பிக் கொண்டே போலீசிடம் 1000 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தகவல் கிடைத்தது. உரிய விசாரணை நடத்திய ஆணையர், லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Cops in a fix as video showing them seeking bribe goes viral
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?
உங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு!