/tamil-ie/media/media_files/uploads/2021/04/corona-chennai.jpg)
தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தில் உச்ச நிலையில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
சென்னையில், மக்கள் கூட்டமின்றி பேருந்துகளில் பயணிக்க, சுமார் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும், மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், பொதுத் தேர்வு குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இன்று காலை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திட்டமிட்டப்படி, வரும் 3-ம் தேதி தேர்வு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.