ZONE WISE BREAKUP OF COVID-19 POSITIVE CASES IN CHENNAI: தமிழகத்தில் நேற்று (மே.20) நிலவரப்படி, 743 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 557 பேர். ஒட்டுமொத்த அளவில் 13,191 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 987 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 5,882 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,219 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 87 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
se
சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி ‘புரொட்டகால்’... கோபத்தை உருவாக்கிய கோபண்ணா பட்டியல்
தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம், மே.21 காலை எட்டு மணி நிலவரப்படி,
திருவொற்றியூர் - 221
மணலி - 108
மாதவரம் - 172
தண்டையார்ப்பேட்டை - 773
ராயபுரம் - 1,538
திரு.வி.க நகர் - 976
அம்பத்தூர் - 352
அண்ணா நகர் - 662
தேனாம்பேட்டை - 869
கோடம்பாக்கம் - 1,192
வளசரவாக்கம் - 570
ஆலந்தூர் - 90
அடையாறு - 446
பெருங்குடி - 103
சோழிங்கநல்லூர் - 113
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 43
மே 21 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 8,228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.