Corona Virus Latest Reports in Tamil Nadu: கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisment
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக இருந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 104 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், தற்போதைய நிலையில், அரசு சார்பில் 33 ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், 3 ஆய்வகம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,09,961 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. 1,05, 864 மாதிரிகளில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 63 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,162 ஆக அதிகரித்துள்ளது. ( 1,455 ஆண்கள்/707 பெண்கள்).
1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 82 பேர் வீடு திரும்பியுள்ளனர். 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 30,580 பேர் உள்ளனர். கொரோனா பாதித்த இருவர், இன்று சென்னையில் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்றும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டமொத்தமாக சென்னையில் 768 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.