Advertisment

தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா - 6,031 பேர் டிஸ்சார்ஜ்

Chennai COVID-19 Cases: சென்னையில் இன்று 1,044 பேருக்கு கொரோனா பாதிப்பு

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா - 6,031 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Corona Virus TN Cases Today: தமிழகத்தில் இன்று (ஆக.,05) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.14 லட்சத்தை கடந்தது.

Advertisment

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,135 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 40 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 125 ஆய்வகங்கள் (அரசு-60 மற்றும் தனியார்-65) மூலமாக, இன்று மட்டும் 61,166 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,65,509 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,07,924 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 112 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 520 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா:

சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,004 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 997 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 90,966 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா:

சென்னை- 1044

செங்கல்பட்டு- 487

திருவள்ளூர்- 472

காஞ்சிபுரம்- 342

விருதுநகர்- 67

ராணிப்பேட்டை- 143

தேனி- 278

வேலூர் -179

கடலூர்-170

குமரி -175

தூத்துக்குடி-173

சேலம்-159

புதுக்கோட்டை- 150

திருச்சி-136

தென்காசி- 121

கோவை - 112

தி.மலை - 112

மதுரை -106

தஞ்சை- 79

விழுப்புரம் -77

திண்டுக்கல்-71

சிவகங்கை- 69

நாகை- 52

கரூர்-50

ஈரோடு - 40

நீலகிரி - 36

அரியலூர்- 36

ராமநாதபுரம்- 32

நாமக்கல்- 31

திருப்பூர்- 27

நெல்லை- 26

திருவாரூர்- 21

பெரம்பலூர் -20

க.குறிச்சி- 18

தர்மபுரி - 17

கிருஷ்ணகிரி- 13

திருப்பத்தூர்-12

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment