கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் ஊரடங்கு ஏதிரோலி தொலைப்பேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் ஊரடங்கு ஏதிரோலி தொலைப்பேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.
coronavirus, corona virus lockdown, chennai high court gave bail order after inquiry by phone, போனில் விசாரித்து ஜாமின், சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா வைரஸ், chennai high court inquiry by phone, chennai high court news, corona latest news, coronavirus news in tamil
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் ஊரடங்கு ஏதிரோலி தொலைப்பேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா விசாரித்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மிக முக்கிய மற்றும் முக்கிய வழக்குகளை தவிர பிற வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்த நிலையில், ஜாமீன் கேட்டும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால், இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி தன் வீட்டில் இருந்தபடியே விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீலின் கருத்தை கேட்க வேண்டும். ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர் தன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
இதையடுத்து தொலைப்பேசியில், குற்றவியல் வக்கீல் பிரபாகரனிடம், நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில், 58 வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.
அதாவது இவர்களுக்கு வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை
தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர்
மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதி, 3 பேரது
ஜாமீன் நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"