New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-01T205241.157.jpg)
Tamil News Today Live
Tamil nadu government : இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil News Today Live
தமிழகத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து 50 பேர் பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அளவில், தேசிய அளவில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனிமனித இடைவெளி கட்டாயம் என்பதால் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்கள் போன்ற இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் அவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
அதேபோல் திருமணங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இறுதிச்சடங்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஊரடங்கின் 2, 3 மற்றும் நான்காம் கட்ட நீட்டிப்பின் போதும், இறுதிச் சடங்கில் 20 பேருக்குமேல் கலந்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஊரடங்கு 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.