corona virus, lockdown, migrant workers, tamil people, gujarat, trains, stranded people, Tn government, gujarat tamil sangams,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
குஜராத்தில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக 2,400 தமிழர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, 3வது முறையாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில், மற்றும் இதர போக்குவரத்து நாடு முழுவதும் முடங்கியுள்ளன. இதனால் பல்வேறு மாநி லங்களில் பணியாற்றிய வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
இதனிடையே, வெளி மாநில தொழிலாளர்களை பேருந்து, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சிக்கியிருந்த மதுரையைச் சேர்ந்த 36 பேர் முதற்கட்டமாக பேருந்தில் சொந்த ஊர் அனுப்ப அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதற்கு அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இயங்கி வரும் தமிழ் சங்கங்களும் உதவி இருந்தன.
குஜரா்ததில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் அடுத்தகட்டமாக 2,400 தமிழர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற் சாலைகள் முன்பு இட்லி வியாபாரம் மற்றும் தெருக்களில் துணி, பாத்திரம் விற்பவர்கள் ஆவர்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இவர் களின் தகவல்களை திரட்டி ஒருங் கிணைத்துள்ள சூரத், வாபி, அகமதாபாத், நவ்சாரி ஆகிய நகரங்களின் தமிழ் சங்கங்கள், அவற்றை மாநில அதிகாரியான பி.பாரதி ஐஏஎஸ்-யிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த தகவல் தமிழக அரசுக் கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த 2,400 தொழிலாளர்களும் சொந்த ஊர் திரும்புவதற்காக 2 சிறப்பு ரயில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இணையதளத்திலும் இவ்விரண்டு ரயில்களில் செல்லும் பயணிகள் விவரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத்தின் தமிழ் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "தமிழக தொழிலாளர்களை சொந்த ஊர் திருப்பி அனுப்புவதற்காக அனுமதி கிடைத்து 2 ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. இத் தகவலை ஏற்ற தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான அதுல்ய மிஸ்ரா, இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளார். முகாம்களில் இல்லாமல் பல்வேறு நகரங்களின் மூலை முடுக்குகளில் தமிழர்கள் சிதறியுள்ளனர். தமிழக அரசிடமிருந்து எங்களுக்கு பதில் கிடைத்தால்தான் அனைத்து தமிழர்களையும் அகமதாபாத் மற்றும் சூரத் ரயில்நிலையங்களில் ஒருங் கிணைக்க முடியும்" என்றனர்.
திண்டுக்கல்லில் நிறுத்தம் : கடந்த 3ம் தேதி குஜராத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் புறப்பட்ட 36 பேர் திண்டுக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அனைவருக்கும் மருத் துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு தெரிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படு வார்கள் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil