Advertisment

மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Chennai high Court : மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, tamil nadu, eb bill, chennai high court, tangedco, electricity board, tneb, tamil nadu governement, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil

corona virus, lockdown, tamil nadu, eb bill, chennai high court, tangedco, electricity board, tneb, tamil nadu governement, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என, சென்னையை ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மே 18 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் உத்தரவிட்ட நீதிமன்றம். அதுவரை, மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்புக்களை துண்டிக்க கூடாது என்றும் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment