இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை ( ஜூன் 30ம் தேதி) உடன் முடிவடைய உள்ளநிலையில், மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மேலும் எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று(ஜூன் 29) முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மருத்துவக்குழு பேட்டி: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Corona virus tamil nadu lockdown edappadi palanisamy lockdown extension
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?