Advertisment

Tamil News Today: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க, விற்க தடை: தமிழக அரசு

Tamil News updates : சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை அடைத்து விற்க பயன்படும் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு தடை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News updates

Tamil News updates : பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க, விற்க தடை

Tamil News Today updates : சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

Advertisment
தமிழக அரசு ஏற்கனவே 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது  இந்த தடை 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.இந்த தடையை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வந்ததால் தமிழகத்தில் தற்போது 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பு? பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த முடிவை, அரசே எடுத்தால் நல்லது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:32 (IST)09 Jun 2020

    அடையாறு கேன்சர் சென்டருக்கு 51 லட்சம் நிதி

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22:16 (IST)09 Jun 2020

    விற்பனை செய்யவும் தடை

    கடைகளில் விற்கப்படும் லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது தமிழக அரசு.

    அரசாணை வெளியீடு.

    21:58 (IST)09 Jun 2020

    முழு முடக்கம் என்பது வதந்தி

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கூறினார்.

    21:30 (IST)09 Jun 2020

    பிரத்தியேக இணையதளம்

    கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் திரும்பியவர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்ய பிரத்தியேக இணையதளம்

    tnskill.tn.gov.in என்ற பக்கத்தில் பதிவு செய்ய வேலைவாய்ப்பு பயிற்சி துறை அறிவுறுத்தல்

    21:27 (IST)09 Jun 2020

    அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்

    நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம், நாமே தீர்வாக மாறுவோம் - கமல்ஹாசன்

    21:00 (IST)09 Jun 2020

    91 பேருக்கு கொரோனா

    கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று - 1,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - 848 பேர் குணமடைந்துள்ளனர்

    20:53 (IST)09 Jun 2020

    குளிர்பானங்களுக்கு தடை

    நீலகிரியில் பிளாஸ்டிக் பாக்கெட் குளிர்பானங்களுக்கு தடை

    வரும் ஜூலை 1ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு..

    20:39 (IST)09 Jun 2020

    அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா

    அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி

    இயக்குநரின் கார் ஓட்டுநர், தனி உதவியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், இயக்குநருக்கும் பரவியது

    பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

    20:38 (IST)09 Jun 2020

    120 பேர் உயிரிழப்பு

    மகாராஷ்டிராவில் மேலும் 2,259 பேருக்கு கொரோனா தொற்று - 120 பேர் உயிரிழப்பு

    மாநிலத்தில் மொத்த பாதிப்பு 90,787ஆக உயர்வு - 3,289 பேர் உயிரிழப்பு - இதுவரை 42,638 பேர் குணமடைந்துள்ளனர்

    20:18 (IST)09 Jun 2020

    தவறான கருத்து

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 5 கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகிறது என்பது தவறான கருத்து - தமிழக தலைமை வன‌உயிரின காப்பாளர்

    வன‌உயிரின சரணாலய அறிவிக்கையின்படி வேடந்தாங்கல் ஏரியை சுற்றியுள்ள 5 கிமீ தனியார் பட்டா நிலம், சரணாலயமாக அறிவிக்கப்பட்டது

    20:17 (IST)09 Jun 2020

    இதுவரை ரூ.51 லட்சம் ஒதுக்கீடு

    சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு மேலும் ரூ.40 லட்சம் ஒதுக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

    கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள ஏற்கனவே ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.51 லட்சம் ஒதுக்கீடு - ராஜ்பவன்

    20:06 (IST)09 Jun 2020

    இன்று பரிசோதனை குறைவு

    நேற்றைய பரிசோதனை 14,454 பாதிப்பு 1562.

    இன்றைய பரிசோதனை 12,421 பாதிப்பு 1685

    நேற்றை விட இன்று பரிசோதனை குறைவு, பாதிப்பு அதிகம்.

    உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவு 21 பேர்.

    இன்று உயிரிழந்தவர்களில் 5 பேர் எந்தவிதமான உடல் உபாதைகளும் இல்லாதவர்கள்!!

    உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு வயது 30

    19:18 (IST)09 Jun 2020

    உமிழ்நீர் பயன்படுத்த தடை

    அனில் கும்பிளே தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றது ஐசிசி

    கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளிச்சிட வைக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!

    19:18 (IST)09 Jun 2020

    சென்னையில் 244 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 21 பேரில் 20 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்; ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்..

    மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 244 பேர் உயிரிழப்பு; திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 15 பேர் பலியாகியுள்ளனர்..

    19:09 (IST)09 Jun 2020

    உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு

    தமிழகத்தில் முதலீடு செய்ய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    18:43 (IST)09 Jun 2020

    சென்னையில் 1,243

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    18:43 (IST)09 Jun 2020

    20 ஐ தாண்டியது உயிரிழப்பு

    முதல் முறையாக 20 ஐ தாண்டியது உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று மட்டும் 21 பேர் உயிரிழப்பு

    * இதுவரை தமிழகத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழப்பு -தமிழக சுகாதார துறை தகவல்

    *ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 15 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

    18:34 (IST)09 Jun 2020

    ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    18:32 (IST)09 Jun 2020

    கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் உறுதி!

    கடந்த 2 தினங்களாக லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

    18:04 (IST)09 Jun 2020

    பின் வாங்கியது சீன ராணுவம்

    கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் பின் வாங்கியது சீன ராணுவம்

    * கல்வான் பகுதியில் சீன ராணுவம் 2.5 கி.மீ. பின் வாங்கியதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல்

    * அண்மைக்காலமாக இரு நாட்டு எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றமான சூழல் ஏற்பட்டது

    17:42 (IST)09 Jun 2020

    பருவத் தேர்வுகள் ரத்து

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து

    * இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க புதுச்சேரி அரசு முடிவு. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

    17:41 (IST)09 Jun 2020

    500 படுக்கைகள் தயார்

    சென்னை கிண்டி கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    17:38 (IST)09 Jun 2020

    கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் செமஸ்டர் தேர்வு - கே.பி. அன்பழகன்

    கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்பு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயரக்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.     

    17:24 (IST)09 Jun 2020

    தனித்தேர்வர்களுக்கு ரத்துக்கான நடைமுறை பின்னர் அறிவிக்கப்படும்

    10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான நடைமுறை தனித்தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

    17:07 (IST)09 Jun 2020

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் விற்பனை ஜூன் 10ம் முதல் தொடக்கம்

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் விற்பனை ஜூன் 10ம் தேதி காலை 8 மணி முதல் ஏர் இந்தியா இணையதளத்தில் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகம்/துணை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    16:32 (IST)09 Jun 2020

    ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று

    மத்திய பிரேதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    15:51 (IST)09 Jun 2020

    சென்னை சிப்பெட்டில் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு (2/2)

    இப்படிப்புகளில் சேருவதற்கான சிப்பெட் ஜெஇஇ 2020 தேர்வுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அனுப்ப கடைசி தேதி 02.07.2020. இதற்கான இணை நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) 12.07.2020 அன்று நடைபெறும். இப்படிப்புகளில் சேருவது தொடர்பான மேலும் விவரங்களைப் பெற சிப்பெட் மேலாளர் திரு பீர் முகமதுவை 9444622771 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் திரு ஸ்ரீகாந்த் சிரலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    15:50 (IST)09 Jun 2020

    சென்னை சிப்பெட்டில் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு (1/2)

    சென்னையிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி (சிப்பெட்), அடுத்த கல்வியாண்டுக்கான பட்டயம் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பிளாஸ்டிக் பிராஸசிங் & டெஸ்டிங் முதுநிலை பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டிசைன் பட்டய மேற்படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் டெக்னாலஜி பட்டயப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பலாம்.

    15:46 (IST)09 Jun 2020

    சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம்

    கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

    இதில், அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நித்யானந்த ராய், அஸ்வின் குமார் செளபே, மண்சுக் மாண்டவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    15:42 (IST)09 Jun 2020

    புதுச்சேரியிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் திரு. கமலக்கண்ணன் அறிவித்தார் 

    15:35 (IST)09 Jun 2020

    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம்.

    கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்தியேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது.

    சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க  தொலைபேசி எண் - 044 - 40067108 அழைக்கலாம். 

     

    15:27 (IST)09 Jun 2020

    ஊர் திரும்பியவர்களுக்கு உரிய பணி வழங்க வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு

    வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும், ஊர் திரும்பியவர்களுக்கு உரிய பணி வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    15:21 (IST)09 Jun 2020

    12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்

    12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது.    இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இதில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பு. 

     

    14:52 (IST)09 Jun 2020

    செங்கல்பட்டிலிருந்து வரும் 12 ஆம் தேதி முதல் ரயில் இயக்க ரயில்வே அனுமதி

    திருச்சி முதல் அரியலூர் - மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    14:50 (IST)09 Jun 2020

    அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 ஆம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில்

    அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 ஆம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    14:18 (IST)09 Jun 2020

    ஸ்டாலின் வரவேற்பு

    தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    13:30 (IST)09 Jun 2020

    கொரோனா கட்டணத்தை அரசு ஏற்குமா?

    கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    13:21 (IST)09 Jun 2020

    திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை உதவி

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் ஜெ.அன்பழகனுக்கு, சிகிச்சை அளிக்க ஐதராபாத்தில் இருந்து முக்கிய மருந்தினை தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாங்கி அனுப்பியுள்ளார், மருத்துவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

    publive-image

    13:19 (IST)09 Jun 2020

    மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார் முதல்வர் பழனிசாமி

    மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற12ஆம் தேதி திறக்க உள்ளார். இதன்மூலம் 3.25 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில்  மேற்கொள்ளப்பட்டு குறுவை சாகுபடி விவசாயிகள் பலன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:15 (IST)09 Jun 2020

    புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    12:34 (IST)09 Jun 2020

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

    தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அரையாண்டு தேர்வவில் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவிற்காக 20 சதவீத அடிப்படையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    publive-image

    publive-image

    publive-image

    12:22 (IST)09 Jun 2020

    ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு

    பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் வகுப்புகளால் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    12:05 (IST)09 Jun 2020

    மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு

    மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது. 

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது,

    11:42 (IST)09 Jun 2020

    கொரோனா சிகிச்சைக்கு பொறுப்பு அலுவலர் – அமைச்சர் வேண்டுகோள்

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள், காலி படுக்கைகள் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:39 (IST)09 Jun 2020

    StopCorona இணையதளம் தொடக்கம்

    தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளை அறிய StopCorona இணையதளம் தொடக்கம்; மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    11:14 (IST)09 Jun 2020

    தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

    10:51 (IST)09 Jun 2020

    புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடக்கும் போதும், அமரும் போதும் ஒரு மீட்டர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; லேசான காய்ச்சல், சளி இருந்தாலே அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:31 (IST)09 Jun 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

    publive-image

    10:04 (IST)09 Jun 2020

    21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை

    சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மொத்தமாக 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    publive-image

    09:58 (IST)09 Jun 2020

    2,66,598 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095லிருந்து 1,29,215 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 7,135 லிருந்து 7,466 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:37 (IST)09 Jun 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று பெட்ரோல் 48 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 77.08 ரூபாயாகவும், டீசல் 49 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 69.74 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    09:28 (IST)09 Jun 2020

    அமைச்சர் உதயகுமார் பேட்டி

    கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும். கொரோனா இல்லாத திரு.வி.க. நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    Tamil nadu news today updates : பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.லேப்டாப், மைக்குடன் கூடிய ஹெட்போன் உள்ளிட்டவை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், பலரும் லேப்டாப் வாங்க, கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.

    சென்னையில் உள்ள,அரசு மருத்துவமனைகளில், கொரோனா பிரிவுகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருவதால், கூடுதலாக,1,500 படுக்கை வசதிகளை, மருத்துவமனைகள் ஏற்படுத்தி வருகின்றன.

    Chennai Tamilnadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment