Advertisment

தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று - மதுரையில் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்குகிறது

Tamil nadu Corona daily report : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai corona cases

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டிருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் வெகுவாக கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. சென்னையில் மட்டும் 1078 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 4,743 பேர் வீடு திரும்பினர்.

நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் விர்ர் : மதுரையில் ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மதுரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,990 ஆகவும், பலி எண்ணிக்கை 124ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,743பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் 41,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16.95 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment