Advertisment

கொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Minister Vijayabaskar : நாம் எல்லோரும் இணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் தமிழக அரசு மறைக்கவில்லை; வெளிப்படைத்தன்மையும் தகவல்கள் பகிரப்படுகின்றன. தமிழக அரசின் கொரோனா செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது. இறப்பு மற்றும் பரிசோதனைகளைக் குறைத்துச் சொல்வதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளேன். நாம் எல்லோரும் இணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என கூறினார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் பலியாகி உள்ளதால், கொரோனா பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment