Advertisment

தமிழகத்தில் இதுவரை 6535 பேருக்கு கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 44 ஆனது

தமிழகத்தில் நேற்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தின்  மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

தமிழகத்தில் நேற்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது . அதே நேரத்தில், கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அரசு கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை, பரிசோதனை, சிகிச்சை நடவடிக்கைகள் பற்றிய இன்றைய புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மாநிலத்தின்  மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று புதிதாக 279 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் கொரோனால் பாதிக்கப்பட்ட 219 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை கொரோனாவில் இருந்ந்து 1,824 பேர் குணமடைந்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment