தமிழகத்தில் ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா; 97 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,39978 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் என்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இன்று தமிழக அரசு ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை விவரம், தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 119 கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களில் இருந்து இன்று 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 25,97,862 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், இன்று மட்டும் 59,437 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யபபட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை மொத்தம் 25,01,919 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதராத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,39978 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் என்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 5,295 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,78,178ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 57,972 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று கொரோனாவால் 18 உயிரிழந்தனர் இதன் மூலம், இதுவரை மொத்தம் 2092 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 354 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 325 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 303 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மாவட்ட வாரியாக, ராணிப்பேட்டை - 272, தேனி 261, கன்னியாகுமரி - 248, விருதுநகர் - 244, தூத்துக்குடி - 220, மதுரை - 220, திருவண்ணாமலை 187, வேலூர் - 184, காஞ்சிபுரம் - 175, கடலூர் - 141, திண்டுக்கல் - 138, புதுக்கோட்டை 128, திருச்சி - 118, தஞ்சாவூர் - 97, விழுப்புரம் - 95, கள்ளக்குறிச்சி - 93, சிவகங்கை -75, சேலம் - 70, தென்காசி - 56, திருப்பத்தூர் - 50, நாமக்கல் - 48, ராமநாதபுரம் - 46 திருப்பூர் - 32 என்ற அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6,000க்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று 5,864 ஆக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,100 - 1300 என்ற அளவில் ஒரு நிலையான எண்ணிக்கையை பெற்று வருகிறது. ஆனால், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் தினமும் பதிவாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"