தமிழகத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
coronavirus daily report, covid-19 positive cases today, covid-19 positive cases today new record, corona virus deaths in tamil nadu, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர்ட், தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா, tamil nadu covid-19 positive cases, சென்னை, மதுரை, latest tamil nadu coronavirus news, tamil nadu total coronavirus cases near 1 lakh
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக 2,000ஐ தாண்டி பதிவாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.
தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3,000ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில் இன்று 4,000ஐ தாண்டி பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 91 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 32,456 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 79 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் பலியாகி உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேர்களும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர்களும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,231 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 3,095 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 41,047 என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில், 2,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"