தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளைவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 110 பேர் உயிரிழந்தனர். இதனால்,மொத்த பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளைவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 110 பேர் உயிரிழந்தனர். இதனால்,மொத்த பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths

TN Latest News Updates

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளைவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 110 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினசரி கொரோனா கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

மாநிலத்தில் உள்ள மொத்தம் 126 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 30 லட்சத்து 20 ஆயிரத்து 714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இன்றும் மட்டும் 65,062 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 29 லட்சத்து 10 லட்சத்து 468 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளைவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 110 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 6,272 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை மொத்த 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 53,486 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு - 408, காஞ்சிபுரம் - 336, திருவள்ளூர் 320, தேனி - 297, ராணிப்பேட்டை - 270, திருநெல்வேலி - 250, தூத்துக்குடி - 237, கரூர் - 222, கடலூர் - 213, கோவை - 190, வேலூர் - 189, தஞ்சாவூர் - 162, சேலம் - 161, திருவண்ணாமலை 153, திண்டுக்கல் - 127, நாகப்பட்டினம் - 101, விருதுநகர் - 100, திருச்சி - 97, விழுப்புரம் - 75 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chengalpattu Chennai Coronavirus Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: