Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 82,000-ஐ கடந்தது

இன்று மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, தமிழகம், தமிழக செய்திகள், கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  இன்று மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நேற்று (28.6.20)ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோன வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 5வது கட்ட பொதுமுடக்கம் ஜூன் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது.

தமிழக அரசு தினசரி கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 47 அரசு கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள், 43 தனியார் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 90 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் இன்று ஒரே நாளில் 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11 லட்சத்து 10 ஆயிரத்து 402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்று மட்டும் 31,505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் அரசு மருத்துவமனைகளில் 44 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று புதிய உச்சமாக 1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 31,858 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,094 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 809 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 284 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 183 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 169 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 142 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 99 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 85 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 109 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கும் தேனி மாவட்டத்தில் 62 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற் வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,656 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வழக்கம் போல, சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிக எண்ணிக்கையில் உள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று தொற்று அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 50க்கும் மேலான கொரோன இறப்புகள் பதிவாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 68 பேர் இறந்த நிலையில் இன்று 54 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இறப்புகள் அதிகரிப்பதையே காட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment