தமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 64 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் 4,000ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 4,000-க்கு குறைவாக பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அதன்படி, தமிழகத்தில் உள்ள 52 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள், 46 கொரோனா பரிசோதனை மையங்கள் என மொத்தம் 98 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 34,962 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 87 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று மேலும் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 64 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 3,051 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,480 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக மதுரை - 379,
திருவள்ளூர் - 300, வேலூர் - 160, செங்கல்பட்டு - 273, தூத்துக்குடி - 141, காஞ்சிபுரம் -133, கன்னியாகுமரி - 115, விழுப்புரம் -106, தேனி - 75, கடலூர் -71, விருதுநகர் -70,
சேலம் - 68, ராமநாதபுரம் - 65, திருவண்ணாமலை - 55
தென்காசி - 27 என கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மற்று சென்னையை ஒட்டியுள்ள வட மாவட்டங்களில் மட்டுமே கொரொனா வைரஸ் தொற்று அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில், மதுரை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிகை அதிக அளவில் பதிவாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"