தமிழகத்தில் ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
coronavirus daily report, tamil nadu coronavirus report today, tamil nadu tested covid-19 positive 3965, tamil nadu coronavirus deaths 69, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர்ட், தமிழகத்தில் 3965 பேருக்கு கொரோனா தொற்று, கோவிட்-19, தமிழகத்தில் கொரோனாவால் 69 பேர் பலி, latest coronavirus news, latest tamil coronavirus news, covid-19 cases, coronavirus positive cases, chennai coronavirus report, madurai, kanyakumari
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஏற்ற இரக்கங்களுடன் பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தினசரி 3 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாது. தமிழக சுகாதாரத்துறை மாநிலத்தின் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மாநிலத்தில் உள்ள மொத்தம் 102 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 36,628 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 லட்சத்து 909 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு உயிரிழந்தனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று 3,591 பே குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,911 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிகை 46,410 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் - 346, மதுரை - 277, செங்கல்பட்டு - 237, தூத்துக்குடி - 175, சேலம் - 136, வேலூர் - 135, கன்னியாகுமரி - 133, திருச்சி - 128, காஞ்சிபுரம் -119, தேனி - 119, கள்ளக்குறிச்சி - 102, விருதுநகர் - 94, ராமநாதபுரம் - 81, நெல்லை - 80, கோவை - 71, சிவகங்கை - 67, தென்காசி - 65, திருவண்ணாமலை - 64, ராணிப்பேட்டை - 50, விழுப்புரம் - 44, ஈரோடு - 42 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு நாட்களாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், மீண்டும் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"