தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் பலி
தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
மாநிலத்தில் இன்று புதிய தொற்று:
Advertisment
Advertisements
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரிசோதனை விவரம்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 149 பரிசோதனை மையங்களில் இன்று 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 80,100 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 45 லட்சத்து 79 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம்:
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,406 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52,721 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா தொற்று எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டு - 419, கடலூர் - 390, சேலம் - 329, திருவள்ளூர் - 293, கடலூர் - 383, கள்ளக்குறிச்சி - 228, காஞ்சிபுரம் - 193, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,247பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 5,248 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி தொற்று 1,100 - 1,300க்குள் ஒரு நிலையாக பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 6,000க்குள் பதிவாகி வந்த நிலையில் இன்று 6,495 ஆக பதிவாகியுள்ளது
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news