/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-31T071552.597.jpg)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் அளவிற்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது - ஒரேநாளில் 413 பேர் குணம்
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. இதனனையடுத்து, கொரோனா மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக நேற்று மட்டும் 11,377மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் 413 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 15,770ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us