Tamil Nadu Coronavirus Daily Bulletin: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக 2, 500 க்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை என்ற போக்கு தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,352 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,11,198 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95.91 விழுக்காடாக உள்ளது .
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகா , ஆந்திர பிரதேசம் போன்ற இடங்களில் குணமடைவர்களின் எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, புதிய தொற்றுகளை விடவும், புதிதாக குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போக்கு நிலவுகிறது.

தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,966 ஆக உள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக உள்ளது.
உயிரிழப்பு நிலவரம் : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 25 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 14 பேரும், அரசு மருத்துவமனையில் 11 பேரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,324 -ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில், தற்போது 83 % கொரோனா உயிரிழப்புகள் 10 மாநிலங்கள். யூனியன் பிரேதேசங்களில் பதிவு செய்யப்படுவதாக மத்திய அரசின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 603 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,258 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :
7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. சில, நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் சற்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வரும் தீபாவளி பண்டிகையை சுய கட்டுப்பாட்டுடன் கொண்டாடவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.