Covid-19 Cases Update : கொரோனாவின், 'ஹாட் ஸ்பாட்' ஆக, சென்னை மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்லுாரி மற்றும் வளாகங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மற்ற மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
நாடு முழுதும், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
ஆவின் பால் பண்ணைகள் மற்றும் அலுவலகங்களில் நூறு சதவிகிதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருளான பால் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது. அதனால் இந்த இக்கட்டான நேரத்தில் ஆவின் பால், பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்படி, ஆவின் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
பால் பண்ணையின் உள்பகுதி மற்றம் வெளிப்பகுதி கிருமிநாசினி மூலம் தினமும் முழுமையாகச் சுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பணியாளரின் பிரச்சினைக்குப் பிறகு, சுத்தப்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
- ஆவின் பால் நிர்வாகம்
-
தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியானது...
தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியானது!https://t.co/5wMBD3FLqB | #CoronaUpdate | #CoronaStatewiseTally | #StayHomeStaySafe pic.twitter.com/c5Ch0zSIih
— News7 Tamil (@news7tamil) May 5, 2020
தமிழகம் முழுவதும் கடைகளைத் திறக்க அரசு வெளியிட்ட அறிவிப்பு தெளிவாக இல்லாததால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வணிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.
அரசு திறக்கச் சொல்கிறது; காவல்துறையினர் மூடச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?’ என்று வணிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு உடனடியாக தெளிவுப்படுத்தி, தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள வணிகர்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் இடையில் முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறேன்.
- டிடிவி தினகரன்
உலக அளவிலான கோவிட்-19 நோய் காரணமாக உருவாகியுள்ள, புதிய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இறக்குமதிக்கான மாற்று பற்றிய கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்தார்.
மே 6-ம் தேதிக்குள் மின் கட்டண செலுத்த வேண்டும் என்ற இறுதிகெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை மின் கட்டணத்தை வசூலிக்ககூடாது என வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1020 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.
அரசின் சரியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது
கண்ணின் இமை காப்பது போல் மக்களை காத்து வருகிறது தமிழக அரசு
- முதல்வர் பழனிசாமி'
நாளை மறுநாள் முதல் திருமழிசையிலிருந்து சென்னைக்கு காய்கறி விநியோகிக்க திட்டமிட்டிருந்தது அரசு
கோயம்பேடு வியாபாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அரசு
திருமழிசையில் பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே வியாபாரம் - கோயம்பேடு வியாபாரிகள்
8 ஆம் தேதி முடிவு அறிவிப்பதாக தெரிவித்த கோயம்பேடு வியாபாரிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து அவர்களது வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!
— VijaySethupathi (@VijaySethuOffl) May 5, 2020
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தீவிரமடைகிறது. நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 26ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி, வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் (Non-Aligned Movement (NAM)) கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது, இந்தியா எப்போதும் உலக நாடுகளைத் தன்னுடைய குடும்பமாக நினைக்கும். நாங்கள், எங்கள் மக்களைப் போலவே உலக மக்கள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறோம். எங்களின் தேவைகள் போக, நாங்கள் உலகின் 123 நாடுகளுக்கு இந்த கொரோனா காலத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பியுள்ளோம். இதில் 59 நாடுகள் அணி சேரா இயக்க குழுமத்தில் உள்ள நாடுகள். அந்த வகையில் உலகின் மருந்தகமாக இந்தியா இருக்கிறது. மேலும், நாங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உருவாக்கும் பணியிலும் இருக்கிறோம்” என்றார்.
டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு திறக்கும் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
இந்தியாவில் ஊரடங்கு தளர்த்துவதற்கு முன்பாக, மக்களிடையே கொரோனா பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமான தேவை ஆகும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
A conversation with Nobel Laureate, Abhijit Banerjee on the economic impact of the COVID19 crisis. https://t.co/dUrok8Wm3Q
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2020
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.195 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் 144 தடை உத்தரவு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
தி.மு.க.,வுடன் இணைந்து, ஏழை மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா பேரிடரில் இருந்து மீள, தன்னார்வலர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது. ஏழை, எளியோருக்கு உணவு முயற்சியில், தி.மு.க.,வுடன் இணைந்துள்ள, தன்னார்வ நிறுவனங்களுடன் உரையாடினேன். இவர்களின் முனைப்பு, இப்பேரிடரில் இருந்து மீண்டெழும் நம்பிக்கையை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights