Advertisment

மே 31-க்கு பிறகும் சென்னையில் தளர்வு இல்லை?

Coronavirus Latest Updates: தேசிய அளவிலான பொதுமுடக்கம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னைக்கு தளர்வுகள் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

தேசிய அளவிலான பொதுமுடக்கம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னைக்கு தளர்வுகள் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க, நம் நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக அனுமதி அளிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர், ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பிரச்னையால் முடங்கியிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து, இரண்டு மாதங்களுக்குப் பின், நேற்று மீண்டும் துவங்கியது. மாநில அரசுகளின் கடும் கெடுபிடியால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து, மார்ச் இறுதியிலிருந்து ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:25 (IST)26 May 2020

    பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்

    தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர். கொரோனா பிரிவை தவிர, அனைத்து பிரிவிலும் பணியாற்றும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

    22:23 (IST)26 May 2020

    மே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மே 25ம் தேதி வரை 3 ஆயிரத்து 274 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும், இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    22:15 (IST)26 May 2020

    இதுவரை 170 பேர் பலி

    ராஜஸ்தானில் இன்று மேலும் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; 3 பேர் உயிரிழப்பு..

    அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,536ஆக உயர்ந்தது; இதுவரை 170 பேர் பலி

    21:54 (IST)26 May 2020

    1,002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    மும்பையில் இன்று மட்டும் 1,002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி;

    * கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழப்பு; இதில் 4 பேர் 40 வயதுக்கு குறைவானவர்கள்..

    * மொத்த பாதிப்பு - 32,791

    * உயிரிழப்பு - 1,065

    * குணமடைந்தவர்கள் - 8,814

    21:35 (IST)26 May 2020

    இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

    இலங்கை தொழிலாளர், காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

    வீட்டில் தவறி விழுந்தபோது 55 வயதான ஆறுமுகன் தொண்டமானின் உயிர் பிரிந்ததாக தகவல்

    21:32 (IST)26 May 2020

    இந்தியர்களின் இருப்புத் தொகையை வழங்குக

    வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களின் இருப்புத் தொகையை வழங்குக

    தனிமைப்படுத்த 14 நாட்கள் என வரையறுத்து வழங்கிய அட்வான்ஸ் தொகையில் மீதமுள்ள 7 நாட்களுக்கான தொகையை திருப்பித்தருவதை உறுதி செய்ய வேண்டும்

    - அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம்

    21:14 (IST)26 May 2020

    மகாராஷ்டிராவில் 2,091 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் மேலும் 2,091 பேருக்கு கொரோனா

    கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 54,758 ஆக உயர்வு

    * இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

    21:14 (IST)26 May 2020

    361 பேருக்கு கொரோனா

    குஜராத் மாநிலத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா

    குஜராத்தில் 361 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 14,829 ஆக அதிகரிப்பு

    * கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 915ஆக அதிகரிப்பு

    20:52 (IST)26 May 2020

    ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும்

    கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் கோவில்களில் வழிபாடுகளை நேரடியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகளுடன் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    20:24 (IST)26 May 2020

    டிக்கெட் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும்

    மார்ச் 22ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் - தெற்கு ரயில்வே

    * irctc.co.in என்ற இணையதளம் மூலம் 100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு - தெற்கு ரயில்வே

    19:49 (IST)26 May 2020

    ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே கவனம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை; ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது

    பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை

    - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

    19:31 (IST)26 May 2020

    கிஸான் வலைதளத்தில் பெயர் திருத்தம்

    ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க அறிவுரை

    ஆதார் அட்டையில் உள்ளபடி பிரதமமந்திரி கிஸான் வலைதளத்தில் பெயர் திருத்தம் செய்து கொள்ள அறிவுரை

    - பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவிபெறாத விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்

    19:18 (IST)26 May 2020

    1,088 சிறார்களுக்கு கொரோனா

    தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,088 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13-60 வயதிற்குட்பட்ட 9,685 ஆண்கள், 5,415 பெண்கள் என மொத்தம் 15,105 பேருக்கு தொற்று. 60 வயதிற்குட்பட்ட 952 ஆண்கள், 583 பெண்கள் என மொத்தம் 1,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    19:02 (IST)26 May 2020

    பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா...? மே 30 முடிவு

    மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என தகவல்

    * சென்னைக்கு பொதுமுடக்கத்தில் தளர்வு அளிக்கக்கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்

    18:49 (IST)26 May 2020

    குணமடைந்தோர் எண்ணிக்கை 9,342

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 லிருந்து 9,342 ஆக அதிகரித்துள்ளது.

    18:34 (IST)26 May 2020

    646 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

    * தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்வு

    * சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா

    * சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - 11,640

    18:29 (IST)26 May 2020

    ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை - திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7பேர் மீது வழக்கு

    ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத், நாகூர் நகர திமுக முன்னாள் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    18:08 (IST)26 May 2020

    மத்திய, மாநில அரசுகளின் தோல்வி

    புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை உருவானது மத்திய, மாநில அரசுகளின் தோல்வி

    தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    - உச்சநீதிமன்றம்

    * பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை

    18:06 (IST)26 May 2020

    பிரதமர் அவசர ஆலோசனை

    எல்லையில் சீனப் படைகள் - பிரதமர் அவசர ஆலோசனை

    லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனை

    * தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு

    18:01 (IST)26 May 2020

    ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலம் மீட்போம்

    ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 173 விமானங்கள், மூன்று கப்பல்கள் மூலம், 34 நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளார். மே 17 முதல் ஜூன் 13ஆம் தேதி வரையான வந்தே பாரத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், சுமார் 60 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் பணி நடைபெற்று வருவதாகவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    17:54 (IST)26 May 2020

    அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

    டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூர் மாவட்டத்திற்கான தொகையை ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

    *கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு

    17:54 (IST)26 May 2020

    +2 விடைத்தாள் திருத்தும் பணி

    தனிமனித இடைவெளியுடன் +2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக மையங்கள் அமைப்பு

    விடைத்தாள் திருத்தும் மதிப்பீடு மையங்களின் எண்ணிக்கை 67லிருந்து 202ஆக அதிகரிப்பு

    ஆசிரியர்களுக்கு 1.20 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்கப்படவுள்ளன

    17:44 (IST)26 May 2020

    பள்ளிகள் ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்க வாய்ப்பு

    வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு தள்ளி போய் இருப்பதால், பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

    10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள், ஜூலை இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர்1 ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கு

    17:32 (IST)26 May 2020

    கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா

    வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரிப்பு

    - முதல்வர் பினராயி விஜயன்

    17:15 (IST)26 May 2020

    கவச உடைகள் : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும்

    இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும், கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை வாங்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உள்ளது. சந்தையில் தரமற்ற பாதுகாப்பு கவச உடைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    17:01 (IST)26 May 2020

    வாடகை வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

    50 சதவீத பயணிகளுடன் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வேன் ஓட்டுனர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகனத்தின் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பர்மிட் ஆகியவற்றுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    16:46 (IST)26 May 2020

    கைதிகள் இருவருக்கு கொரோனா

    கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    * சிறைப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

    16:45 (IST)26 May 2020

    எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    16:37 (IST)26 May 2020

    குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் - ஐ.சி.எம்.ஆர்

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 41.61% ஆகவும், இறப்பு விகிதம் 2.87% ஆகவும் தற்போது உள்ளது. அதிகபட்சமாக தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    16:27 (IST)26 May 2020

    சேலத்தில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ்

    சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    15:51 (IST)26 May 2020

    டெல்லியில் உயரும் கொரோனா மரணம்

    டெல்லியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 412 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளன. இதனால் டெல்லியில் வைரஸ் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மே 22 அன்று அதிகப்பட்சமாக 660 புதிய வழக்குகள் பதிவாகின. திங்களன்று 635 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், ”கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது” என டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    15:36 (IST)26 May 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எல்.பி.ஜி விநியோகஸ்தர்கள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். திடீர் ஆய்வு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    15:06 (IST)26 May 2020

    கர்நாடகாவில் 100 புதிய கேஸ்கள்

    கர்நாடக மாநிலத்தில் இன்று, செவ்வாய்க்கிழமை 100 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்பிய 45 பேர், தமிழ்நாட்டிலிருந்து திரும்பிய 21 பேர் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து திரும்பிய 13 பேர் அடங்குவர். இந்நிலையில் மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 2,282 ஆக உள்ளது. இதில் 722 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    14:58 (IST)26 May 2020

    22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    14:53 (IST)26 May 2020

    திருவண்ணாமலையில் கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. 

    14:09 (IST)26 May 2020

    கொரோனா 2-ம் கட்ட பாதிப்பு

    கொரோனா தொற்றின் முதல் கட்ட ஆட்ட பாதிப்பு சற்று தணிந்துள்ளது. இதை தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலை திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனாவின் 2ஆம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2ஆம் கட்ட கொரோனா ஆட்டத்தில் எந்த நேரத்திலும் தொற்று பாதிப்பு மிக மிக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    13:31 (IST)26 May 2020

    போபாலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில், வெப்பநிலை 45 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இந்தவாரத்தில் வெப்பநிலை 43 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    publive-image

    13:22 (IST)26 May 2020

    அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் 28 பிப்ரவரி 2021 வரை நீர் திறக்கப்படுவதால் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:48 (IST)26 May 2020

    மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் – ராகுல் காந்தி

    கொரோனாவுக்கு எதிரான போரில் மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    12:41 (IST)26 May 2020

    ஜாபர் சேட் பணியிட மாற்றம்

    சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பிரதீப் வி.பிலிப் புது டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொது விநியோகத்துறை சிஐடி பிரிவு டிஜிபியாக பணிமாற்றம் செய்து தமிழக அரசு உ்ததரவு பிறப்பித்துள்ளது.

    12:10 (IST)26 May 2020

    முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    தமிழகத்தில் மே 31ஆம் தேதி பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11:48 (IST)26 May 2020

    மீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைப்பு

    ஊரடங்கு காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 41 நாட்களாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து்ளளது.

    இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்.15 - ஜூன் 14 வரை இருந்த தடைக்காலம் ஏப்.15 - மே 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மேற்கு கடற்கரையில் ஜூன் 1 - ஜூலை 31 வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15- ஜூலை 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    11:36 (IST)26 May 2020

    நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு

    நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. 

    11:14 (IST)26 May 2020

    ரயில், விமான நிலையம் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி

    தமிழகத்தில், உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளதால், சென்னையில், விமான நிலையத்திற்கு செல்வோர், ஆட்டோ, டாக்சி இல்லாமல், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    11:07 (IST)26 May 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்publive-image

    10:40 (IST)26 May 2020

    ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 549 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    10:27 (IST)26 May 2020

    4,98,995 வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு  விதிளை மீறியதாக ரூ.7.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    10:02 (IST)26 May 2020

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன்முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

    09:51 (IST)26 May 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு, சர்வதேச நாடுகளில் பெருமளவில் மரணங்களை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்கா - 99,805

    இங்கிலாந்து - 36,914

    இத்தாலி - 32,877

    பிரான்ஸ் - 28,432

    ஸ்பெயின் - 26,837

    பிரேசில் - 23,522

    ஜெர்மனி - 8,428

    09:45 (IST)26 May 2020

    கேரளாவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின

    கேரளாவில், கொரோனாெ ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றன. தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்னர் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

    publive-image

    publive-image

    09:24 (IST)26 May 2020

    சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

    சென்னையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர், அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    09:16 (IST)26 May 2020

    1,45,380 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60,490 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, தமிழகத்தில், 4.74 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை, பொதுமக்கள் நலன் கருதி ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தமிழகத்தில், மார்ச், 23 மாலை, 6:00 மணி முதல், 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி, 'சும்மா' வெளியே வந்தவர்கள் மீது, 1897 தொற்று நோய் தடுப்புச்சட்டம், 1860ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனை மீறி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநில மக்கள், நீலகிரி எல்லைக்குள் வருகின்றனர்.

    Chennai Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment