தமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 4,545 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 4,545 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
coronavirus report today, TN coronaviurs daily report, covid-19 positive cases, TN coronavirus death rate, கொரோனா வைரஸ், தமிழகத்தில் 4545 பேர் டிஸ்சார், தமிழகத்தில் 3616 பேருக்கு கொரோனா தொற்று, covid recovery rate increased, new record tn corona patients recovery rate, latest coronavirus news, latest corona virus report, tamil nadu latest corona virus report
தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 4,545 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கடந்த வாரத் தொடக்கத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 4,000-க்கு மேல் பதிவாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை 4,000-க்கு குறைவாக பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினசரி கொரோனா தொற்று எண்ணிகை, உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 4,545 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,116 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் சதவிதம் 84.33% ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 95 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 35,423 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 13,52,360 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 65 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 45,835 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 334 பேருக்கும், விருதுநகர் - 253, திருவள்ளூர் - 217, நெல்லை - 181, தூத்துக்குடி - 144,
ராணிப்பேட்டை- 125, கன்னியாகுமரி - 119, வேலூர் - 117
காஞ்சிபுரம் -106, திருவண்ணாமலை - 99, தேனி - 94, செங்கல்பட்டு - 87, கடலூர் - 65, தென்காசி - 62, திருச்சி - 55 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில், இன்று மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி,தேனி ஆகிய தென் மாவட்டங்களில் தொற்று அதிக அளவில் பதிவாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"