கொரோனாவை வென்ற காவல்துறை துணை ஆணையர் - கமிஷனர் அலுவலகத்தில் வரவேற்பு

Chennai police : 14 நாட்கள் தனிமைக்கு பிறகு அவர் பூரண குணமடைந்த நிலையில், அவர் இன்று ( மே 25ம் தேதி) பணிக்கு திரும்பினார். கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். அவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Chennai police : 14 நாட்கள் தனிமைக்கு பிறகு அவர் பூரண குணமடைந்த நிலையில், அவர் இன்று ( மே 25ம் தேதி) பணிக்கு திரும்பினார். கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். அவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A. K. Viswanathan chennai police Commissioner

A. K. Viswanathan chennai police Commissioner

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி, மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதில் சென்னையின் பங்கு மட்டும் 10,576 ஆகும். கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட் ஆக செயல்பட்டு வந்த கோயம்பேடு காய்கறி சந்தை தற்போது மூடப்பட்டு,தற்போது அந்த சந்தை, திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க கோயம்பேடு சந்தையே முக்கிய காரணமாக இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா உறுதியாவதால், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தான் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களால் அங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

Advertisment
Advertisements

publive-image

கோயம்பேடு மார்க்கெட்டில் கண்காணிப்பு பணிகளை மேற்பார்வையிட்ட சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமிக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் உடனடியாக, சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அது நெகட்டிவ் என்று வந்ததை தொடர்ந்து, 4 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

14 நாட்கள் தனிமைக்கு பிறகு அவர் பூரண குணமடைந்த நிலையில், அவர் இன்று ( மே 25ம் தேதி) பணிக்கு திரும்பினார். கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். அவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Police Corona Virus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: