CoronaVirus Tamil Nadu News: தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்திருக்கிறது.
Advertisment
கொரோனா பாதிப்பு குறித்து தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்களை வெளியிடுகிறார். அரசு சார்பில் செய்திக் குறிப்பும் தரப்படுகிறது. அதன்படி இன்று சனிக்கிழமை மாலை தரப்பட்ட செய்திக் குறிப்பின்படி தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்திருக்கிறது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை இல்லாத அளவில் இன்று அதிக நபர்கள் குணமாகியிருப்பதாக அமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரம் கூறுகிறது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆனது. திருப்பூரில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும், ஈரோட்டில் 31 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"