Covid-19 Positive Cases Update: இன்று காலை இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர். தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 309 ஆக உயர்ந்துள்ளது. ஆகையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கான நிதியை முன்கூட்டியே ஒதுக்க வேண்டுமென, பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது. இதில் 156 பேர் குணம் அடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Coronavirus Latest News Live Updates
கொரோனா வைரஸ் குறித்த, அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர்.
சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களில் 647 பேருக்கு கடந்த 2 நாட்களில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.கமல் டுவிட்டர் பதிவு
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2020
காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு
சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி
மருத்துவமனைக்கு இருசக்கரவாகனத்தில் செல்ல தடை - ஆம்புலன்சில் மட்டுமே செல்ல அனுமதி
மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்தகங்களுக்கு உத்தரவு
கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது நிலையில்தான் உள்ளது - சுகாதாரத்துறை
* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு - சுகாதாரத்துறை
* கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது - சுகாதாரத்துறை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தொழில்துறை முடங்கியுள்ள நிலையில் வளர்ச்சி எதிர்பார்ப்பு சரியும் என தெரிவித்துள்ளது. கடந்த சில நிதியாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிந்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக சரியும் என கணிப்பு வெளியாகியுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
#CODVID19 TN STATS 03.04.20:
Screened Passengers: 2,10,538
Beds in Isolation Wards: 23,689
Ventilators: 3,396
Current Admissions:1,580
Samples Tested: 3,684 (Negative:2789, Positive: 411 (Discharged:7), Under Process: 484)
#TN_Together_AgainstCorona @MoHFW_INDIA— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 3, 2020
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
* கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கின் எதிரொலி
* இந்திரா கேண்டீனில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் ரத்து
* தவறாக பயன்படுத்தப்படுவதாக நகர மேம்பாட்டு நிர்வாகம் விளக்கம்
* இந்திரா கேண்டீன் என்பது தமிழகத்தில் அம்மா உணவகம் போல் செயல்பட்டு வருவது...
கொரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள, கொளத்தூர் மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல்வேறு உதவிகளை செய்தார். காய்கறி கடைகளை பார்வையிட்ட அவர், வியாபாரிகளிடம் விலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதோடு, தொகுதி மக்களுக்கு இலவச உணவு பொருட்களையும் வழங்கினார். தூய்மை பணியாளர்களுக்கு உணவு, முக கவசம், சானிடைசர், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவையும், வெளிமாநில மக்களுக்கு தேவையான உதவியையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்து கொடுத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சமூக விலகலை கடைப்பிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது 144 சட்டம் கடுமையாக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா உணவுப்பொருட்களை இந்த மாத இறுதிக்குள் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்படும். அப்போது ரூ.1000 வழங்கப்படும். இந்த இக்கட்டான சூழலில் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு, அரசு அங்கீகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3000 வழங்கப்படும்” என்றார்.
கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கை உலகிற்கு முன்மாதிரியானதாக மாற்றிய மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை அலட்சியம் செய்து சாலைகளில் சுற்றுவோருக்கும் இது பொருந்தும். இதுவரை ஊரடங்கை மதிக்காதவர்கள் இனியாவது மதித்து, பிரதமர் தெரிவித்த நன்றிக்கு தகுதியானவர்களாக மாற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) April 3, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights