Advertisment

தமிழகத்தில் கொரோனா: புதிய தொற்றுகளில் சரிபாதியை வழங்கும் 6 மாவட்டங்கள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இன்றைய புதிய தொற்றுகளில் 50% பங்களிப்பு செய்துள்ளன.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் கொரோனா: புதிய தொற்றுகளில் சரிபாதியை வழங்கும் 6 மாவட்டங்கள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இன்றைய புதிய தொற்றுகளில் 50% பங்களிப்பு செய்துள்ளன.

Advertisment

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள் கணிசமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தினசரி கண்டறியப்படும் புதிய தொற்றுகள், பரிசோதனைகள், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 68 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனை விவரம்:

தமிழகத்தில் உள்ள 190 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை மையங்கள் 66, தனியார் பரிசோதனை மையங்கள் 124) இன்று (அக்டோபர் 9) 97,087 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை மொத்தம் 81 லட்சத்து 41 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில்,தமிழகத்தில் இன்று 95,301 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 79 ஆயிரத்து 6 ஆயிரத்து 698 பேருக்கு கொரோன வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று விவரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று 5,357 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை மொத்தம் 5,91,811 பேர் கொரோனா தொற்றில் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், தற்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 44,197 பேர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 68 (தனியார் மருத்துவமனைகளில் 34 பேர், அரசு மருத்துவமனைகளில் 34 பேர்) பேர் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,120 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதியதாக கண்டறியப்பட்ட 5,185 கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகையில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் 50 சதவீதம் பங்களிப்புகளை செய்துள்ளனர். இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பதிவாகி உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றில் 50% பங்களிக்கும் மாவட்டங்கள்: 

சென்னையில் இன்று அதிகபட்சமாக 1,288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 397 பேர்களுக்கும், செங்கல்பட்டு - 343, சேலம் - 295, தஞ்சாவூர் - 240, திருவள்ளூர் - 226, திருப்பூர் - 159 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Coimbatore Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment