Advertisment

கோவையில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டத்தை தொடங்கிய தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்து பலனில்லை என்று கருதிய மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்து போராட்டத்தை தொடங்கினர்.

author-image
WebDesk
New Update
கோவையில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டத்தை தொடங்கிய தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவறையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Advertisment

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்து பலனில்லை என்று கருதிய மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்து போராட்டத்தை தொடங்கினர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்திரம், இ.எஸ்.ஐ, பி.எஃப், போன்ற அரசின் சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கோவை மாநகராட்சி முன்பு காலவரையற்ற போராட்டம்.

இது தொடர்பாக இரண்டுமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால் காந்தி ஜெயந்தியான இன்று முதல் காலவறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதனால் மாநகராட்சி பகுதிகள், பள்ளிகள், அலுவலகங்களில் குப்பைகளும்,கழிவுகளும் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சரியாக அனுகாததும், நிர்வாக கோளாருமே இதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment