திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டுகள் விநியோகம்; ஒருவர் கைது

திருச்சியில் 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகளாக விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சியில் 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகளாக விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Counterfeit notes

திருச்சியில் கள்ளநோட்டுகளை விநியோகம் செய்த நபரை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திருச்சி மாவட்டம், ஆளவந்தான்நல்லூர் பகுதியில் வசித்து வரும் பவுல்ராஜ் என்பவர் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர், 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து அதனை செலவு செய்துள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில், 500 ரூபாயை கள்ளநோட்டாக ஸ்கேன் செய்து செலவளித்த பவுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கள்ளநோட்டு அச்சிடுவதற்காக அவர் பயன்படுத்திய கலர் பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள், வங்கி கணக்கு புத்தகம், வெள்ளை பேப்பர்கள், கள்ளநோட்டுகள் மற்றும் பல உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment
Advertisements

மேலும், கள்ளநோட்டு தொடர்பாக தகவல் அறிந்தால் போலீசாரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி - க. சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: