/tamil-ie/media/media_files/uploads/2018/11/h3.jpg)
ஆன்லைனில் மருந்துகள்
ஆன்லைனில் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்துள் விற்பனை:
ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பதிவு செய்யப்படாத பல கடைகள் மூலம் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு காலாவதியான,போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.
ஆன்லைலில் மருந்துகள் வாங்குவது, மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது, சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்வதற்கு வரும் நவ.9-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார். வழக்கு விசாரணையையும் 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
மேலும் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பதில் அளிக்கவும் நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.