Advertisment

கரூர் பா.ஜ.க பொதுக்கூட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு கருத்து

கரூர் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Court has given permission to hold BJP rally in Karur

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

கரூரில் உள்ள திருவள்ளூவர் திடலில் பாரதிய ஜனதா சார்பில் ஜூலை 1ஆம் தேதி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாஜக நிர்வாகி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை அணுகினார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

எதிர்கட்சியும், சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது இதே வேலையை தான் செய்கிறது. கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது” எனக் கூறியது.

மேலும், மனுதாரரின் மனு உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) பாஜக பொதுக்கூட்டம் நடக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Annamalai Karur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment