New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/palani.jpg)
இந்து அல்லாதவர்கள் தடை பதாகை நீக்கப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி
பழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்தில் வைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்து அல்லாதவர்கள் தடை பதாகை நீக்கப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி
பழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்தில் வைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 தடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிறவர்களும் இந்து கோவிலுக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என்று மனுதாரர் குறிப்பிடிருந்தார். பழனி தேவஸ்தானத்தால் வைக்கப்பட்டிருந்த இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற அறிவிப்பு பலகையை தற்போதைய செயல் அலுவலர் நீக்கியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை என்ற பதாகை அகற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.