சர்க்கார் பட விவகாரத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ. ஆர் முருகதாஸ் மீது வழக்குப் பதிவு:
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்க்கார். இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்ததாகவும் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக முருகதாஸ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டது.மத்திய குற்ற பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ஜனநாயக நாட்டில் அரசின் திட்டங்களை விமர்சிப்பது குற்றம் அல்ல, ஏற்கனவே இந்த படம் தணிக்கை செய்யபட்டு அனுமதி அளித்த பிறகு தான் வெளியிடபட்டது எனவே இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சினிமாட்டோ சட்டத்திற்கு எதிராக பதிவு செய்ய பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகவும் விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது. என் அவசர வழக்காக விசாரிக்க கோரினிர்கள் என கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கின் விசாரணை வரும் வெள்ளிக்கிழமை தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முதல் தகவல் அறிக்கை மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது காவல் துறைக்கு அறிவுத்திய நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.