Advertisment

தென்காசி கடைகளில் தீ விபத்து: கோடிக்கணக்கில் பொருள்கள் நாசம்

தென்காசி குற்றாலம் பஜார் பகுதியில் சீசனுக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடைகளில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Courtallam temporary shop fire incident

குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியை அடுத்த தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது.

இங்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தெற்கு வாசல் பகுதியிலும் தற்காலிகமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Advertisment

இந்தத் தற்காலிக கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகின.

இதில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அருவி அருகே உள்ள உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்காலம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.

தீ விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி அங்கும் இங்குமாக நடந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று அசாதாரண சூழல் நிலவியது.

இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fire Accident Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment