Chennai News Highlights: சிலருக்கு இந்தியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை... தடுத்து நிறுத்த முடியாது - டிரம்ப்பை விமர்சித்த ராஜ்நாத் சிங்

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajnath singh

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 55.23% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 6.494 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

  • Aug 10, 2025 21:43 IST

    சிலருக்கு இந்தியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை... தடுத்து நிறுத்த முடியாது - டிரம்ப்பை விமர்சித்த ராஜ்நாத் சிங்

    மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான பி.இ.எம்.எல் ரயில்வே உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்கியதற்கும், இந்தியப் பொருளாதாரத்தை "செத்துப் போன" பொருளாதாரம் என்று குறிப்பிட்டதற்கும் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    "சப்கே பாஸ்" (எல்லாருக்கும் முதலாளி) என்று தங்களைக் கருதிக்கொள்ளும் சிலர், இந்தியாவின் விரைவான வளர்ச்சி பிடிக்காததால், இந்தியப் பொருட்களை விலை உயர்த்த முயற்சிக்கின்றனர் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். "இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை சிலர் விரும்பவில்லை. இந்தியாவின் வளர்ச்சியால் அவர்களுக்கு மகிழ்ச்சியில்லை. 'சப்கே பாஸ் நாம் இருக்கும்போது, இந்தியா மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக வளர முடியும்?' என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.



  • Aug 10, 2025 18:44 IST

    சென்னை மற்றும் புறநகரில் பரவலாக பெய்கிறது மழை

    சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோன்று, அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

     



  • Advertisment
    Advertisements
  • Aug 10, 2025 18:04 IST

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.



  • Aug 10, 2025 18:02 IST

    ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    செய்தியாளர் சந்திப்பில் காட்டிய டிக் செய்யப்பட்ட ஆவணம் தேர்தல் அலுவலர் கொடுத்ததல்ல என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஒருவர் இருமுறை வாக்களித்ததற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



  • Aug 10, 2025 17:24 IST

    மக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

    நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரர் பெயரில் பட்டா வழங்கப்படும். 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியருக்கு அதிகாரம் தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • Aug 10, 2025 17:21 IST

    துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி திட்டம்

    அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்தை பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெடுத்துள்ளார். அதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Aug 10, 2025 17:03 IST

    ஆந்திராவில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 6 பேர் கைது

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் 1 டன் எடையுள்ள 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர். சின்னவரதய்யப்பள்ளியில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்



  • Aug 10, 2025 17:03 IST

    வைரமுத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள் - சின்மயி காட்டம்

    சின்மயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் சின்மயிடம் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பியதும், கடும் கோபமடைந்த சின்மயி, இப்ப எதற்கு அவரை பத்தி என்னிடம் கேள்வி கேட்டீங்க. என்கிட்ட வைரமுத்து குறித்து தான் பேச வேண்டுமா. இந்த கேள்வி மூலமா என்னை ட்ரிக்கர் செய்து நான் கோபமடைந்து பதில் தரணும் அதைத்தான் எதிர்பாக்குறீங்க. நீங்களும் ஒரு பெண்தான், நீங்களே இப்படி கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. வைரமுத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என பதில் அளித்தார்.



  • Aug 10, 2025 16:34 IST

    டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட ராகுல் கோரிக்கை

    தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தியுள்ளார். votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமோ, 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவோ, எங்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கலாம். இது ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 10, 2025 16:26 IST

    24 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாகை, சிவகங்கை, நீலகிரி, தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 10, 2025 16:22 IST

    மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை - அன்புமணி

    தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான். அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

     



  • Aug 10, 2025 16:10 IST

    புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறிவருகிறது: மோடி

    பெங்களூர்வில், புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது, புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறிவருகிறது. பெங்களூருவின் ஆன்மாவில் ஆன்மிக அறிவு உள்ளது. அதேவேளை, அதன் செயல்பாடுகளில் தொழில்நுட்ப அறிவு உள்ளது. பெங்களூருவின் வெற்றிக்கு இங்குள்ள அறிவார்ந்த மக்களின் முயற்சியே காரணம். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி நமது தொழில்நுட்பம், மேக் இன் இந்தியாவின் வலிமையை காட்டுகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வல்லமையை நாம் எடுத்துக்காட்டி பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்துள்ளது. பெங்களூருவும், அதன் இளைஞர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முக்கிய பங்காற்றினர் என்றார்.



  • Aug 10, 2025 16:09 IST

    ஓட்டுத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு ராகுல் அழைப்பு

    ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க நாட்டு மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “வாக்குகள் திருடப்படுவது ஒரு நபர்-ஒரு ஓட்டு’ என்கிற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காள பட்டியல் அவசியமானது. அதனால்தான், மக்கள் மற்றும் கட்சிகள் சரிபார்க்கும் வகையில் வெளிப்படை தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம். எங்களது குரலுக்கு வலு சேர்க்க Votechori.in/ecdemand என்கிற இணையதளத்தை பார்வையிடுங்கள் அல்லது 96500 03420 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இது நம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதல் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 10, 2025 16:08 IST

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பில் பார்த்து விடை அளிக்கும் முறை

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து விடை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. 2026 -27ம் கல்வியாண்டில் 9ம் வகுப்புத் தேர்வில் புத்தகங்களை பார்த்து விடை அளிக்கும் முறை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தர்க்கவியல் சிந்தனையை ஊக்குவிக்கும், மாணவர்களின் தேர்வுப் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் புதிய முறை அறிமுகம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிப்பதே நோக்கம்.



  • Aug 10, 2025 16:07 IST

    ஆசிய அலைச்சறுக்கு இறுதிப் போட்டி - கொரியா வீரர் தங்கம்

    மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்று வரும் 4 வது அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஓபன் இறுதிப் போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த கனோவா ஹீஜே வெற்றி பெற்று தங்கம் வென்றார்.



  • Aug 10, 2025 16:05 IST

    'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு மேக் இன் இந்தியாதான் காரணம்"

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு நமது தொழில்நுட்பமும் மேக் இன் இந்தியா திட்டமும் தான் காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் படைகளின் வெற்றியும், எல்லைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் எதிரிகளை அழித்ததை உலகம் கண்டது எனத் தெரிவித்தார்.



  • Aug 10, 2025 15:36 IST

    "3-வது சிறந்த பொருளாதார நாடாக வேகமாக நகர்கிறது இந்தியா"

    இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது. 2014ம் ஆண்டில், 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ இருந்தது. இப்போது 24 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. 2014ல் 3 தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன, இப்போது 30 நீர்வழிகள் உள்ளன. இந்தியாவின் 50% -க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை யு.பி.ஐ மூலம் நடைபெறுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



  • Aug 10, 2025 15:13 IST

    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

    சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனுக்கு நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது



  • Aug 10, 2025 15:11 IST

    உத்தரகாண்ட் நிலச்சரிவு - 6வது நாளாக தொடரும் மீட்பு பணி

    உத்தரகாண்ட், உத்தரகாசியில் மேக வெடிப்பு, நிலச்சரிவால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1,100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மூலம் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது



  • Aug 10, 2025 14:55 IST

    சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தொடக்கம்

    சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்களிக்கின்றனர். தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.



  • Aug 10, 2025 14:17 IST

    "நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட சட்டத்தில் இடமில்லை"

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட சட்டத்தில் இடமில்லை என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது



  • Aug 10, 2025 14:16 IST

    ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை – மோடி பயணம்

    பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 



  • Aug 10, 2025 13:31 IST

    தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களின் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Aug 10, 2025 13:15 IST

    வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த மோடி

    3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூரு - பெலகாவி, நாக்பூர் - புனே அமிர்தசரஸ் - வைஷ்ணோ தேவி கத்ரா வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது



  • Aug 10, 2025 12:25 IST

    மழைநீர் வடிகால் பணி - நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.



  • Aug 10, 2025 12:00 IST

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும்

    சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் 7வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி. தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. 



  • Aug 10, 2025 11:51 IST

    12ம் வகுப்பு மாணவன் மீது கொடூரமான தாக்குதல்

    2ம் வகுப்பு மாணவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள். தாக்குதல் காட்சிகளை வீடியோவாகவும் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் பதிவேற்றிய நிலையில், அந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 



  • Aug 10, 2025 11:22 IST

    இண்டிகோ நிறுவனம் ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    விமான பயணத்தில் தனக்கு அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கில், இண்டிகோ நிறுவனமானது ரூ.1.5 லட்சம் இழப்பீடாக வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவு கடந்த ஜனவரியில் புதுடெல்லிக்கு பயணிக்கும் போது, இது தொடர்பாக அளித்த புகாரையும் விமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனவும் மனுதாரர் தெரிவிப்பு. வழக்குச் செலவாக ரூ.25,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 10, 2025 11:20 IST

    வாக்கினை பதிவு செய்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

    சென்னையில் நடைபெற்று வரும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 2,000 உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை சங்கத்தில் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 



  • Aug 10, 2025 10:51 IST

    மாமல்லபுரம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாட்டு வீரர் வெண்கலம் வென்றார்

    மாமல்லபுரத்தில் நடந்த ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் வெண்கலம் வென்றார். 12.60 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கம் வென்றுள்ளது.



  • Aug 10, 2025 10:20 IST

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்து பேசிய திருமாவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்து பேசிய திருமாவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்தெரிவித்துள்ளார். திமுகவிடம்கூடுதல்தொகுதிவாங்கதிமுகதலைவரைதிருமாவளவன்புகழ்ந்துபேசுவதில்தவறில்லை. மக்கள்செல்வாக்குபெற்றசாதிமதங்களைகடந்தமறைந்ததலைவர்களவிமர்சிப்பதுநாகரிகமற்றசெயல்என்றார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாகுறித்தவிமர்சனத்தைதிருமாவளவன்திரும்பப்பெறவேண்டும்எனஓபிஎஸ்கூறியுள்ளார்.

     

     



  • Aug 10, 2025 09:47 IST

    இந்திய விமானப் படையில் ஆட்சேர்க்கை - தாம்பரத்தில் 4 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

    அக்னிவீர்திட்டத்தில்இந்தியவிமானப்படைக்குஆட்சேர்ப்புவரும்செப்டம்பர் 2 முதல் 5 ஆம்தேதிவரைதாம்பரம்விமானப்படைநிலையத்தில்நடக்கஉள்ளதாகசென்னைமாவட்டஆட்சியர்தெரிவித்துள்ளார். பிள்ஸ் 2யில் 50% தேர்ச்சியுடன் 17 அரைமுதல் 21 வயதினர்இந்தஆட்சேர்க்கையில்பங்கேற்கலாம்

     



  • Aug 10, 2025 09:18 IST

    இந்தியாவை பகைத்ததால் பாகிஸ்தானுக்கு நஷ்டம்

    இந்தியாவை பகைத்துக்கொண்டு இரண்டு மாதங்களில் ரூ.127 கோடி வருவாயை பாகிஸ்தான் இழந்துள்ளது. இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 



  • Aug 10, 2025 09:17 IST

    காசாவில் பரிதாபம் - உயிரிழந்த 15 வயது சிறுவன்

    காசாவில் பாராசூட் மூலம் வீசப்பட்ட உணவு பொருட்கள் வாங்க முயன்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தார். சோகம் இஸ்ரேலின் குண்டுகளுக்கு தப்பி நிவாரண பொருள் மேலே விழுந்ததால் உயிரிழந்தார்.



  • Aug 10, 2025 09:16 IST

    காஷ்மீருக்கு சரக்கு ரயில் சேவை

    பஞ்சாபில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்முறையாக சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரின் வர்த்தகம் மற்றும் தொடர்புக்கு சிறப்பான நாள் என பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.



  • Aug 10, 2025 09:07 IST

    விளையாட்டு வீரர்கள் 2 ஆண்டுகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    விளையாட்டுவீரர்கள்சிறப்புஉதவித்தொகைபெறவரும்செப்டம்பர் 8 ஆம்தேதிக்குள்விண்ணப்பிக்கவிளையாட்டுமேம்பாட்டுஆணையம்அழைப்புவிடுத்துள்ளது. www.sdat.tn.gov.inஎன்றஇணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். தேர்வாகும்வீரர்களுக்கு 2 ஆண்டுகள்உதவித்தொகைவழங்கப்படும்.

     



  • Aug 10, 2025 08:43 IST

    கர்நாடகாவில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை

    கர்நாடகாவில் இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம்) அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடாகாவில்காங்கிரஸ்ஆட்சிஅமைந்ததும்தேசியகல்விக்கொள்கைகைவிடப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்துஅமைக்கப்பட்டமாநிலகல்விக்கொள்கைஆணையம் 2197 பக்கங்கள்கொண்டஅறிக்கையைமுதலமைச்சர்சித்தராமையாவிடம்அளித்தது.

     



  • Aug 10, 2025 08:41 IST

    மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டையில் தேசியக்கொடி நிறத்தில் வண்ணம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டையில் தேசியக்கொடி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. 



  • Aug 10, 2025 08:40 IST

    டிரம்ப் - புதின் இடையே வரும் வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தை

    ரஷ்யாஉக்ரைன்இடையே 3 ஆண்டுகளுக்குமேலாகபோர்நீடித்துவரும்நிலையில்அமெரிக்கஅதிபர்ட்ரம்ப், ரஷ்யஅதிபர்புதின்இடையேவரும்வெள்ளிக்கிழமைபேச்சுவார்த்தைநடக்கஉள்ளது. அமெரிக்காவின்அலாஸ்காவில்பேச்சுவார்த்தைநடைபெறஉள்ளது.

     



  • Aug 10, 2025 08:37 IST

    வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டு குட்டி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம்பகுதியில் வினோத உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. ஆடு வித்யாசமான தோற்றத்தில் இருப்பதால் ஆட்டு குட்டியை வியப்புடன் பார்த்து சென்ற கிராம மக்கள் எதுவும் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.



  • Aug 10, 2025 08:31 IST

    புதுச்சேரி மது பாரில் தமிழக இளைஞர் குத்திக்கொலை

    புதுச்சேரி ரெஸ்டோ பாரில் அதிகாலை தமிழக இளைஞர்கள் மது அருந்தியபோது பவுன்சர்களுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் இதில் பவுன்சர் ஒருவர் கத்தியால் குத்தியதில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சண்முக பிரியன் உயிரிழந்தார். பவுன்சரை கைது செய்து புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 10, 2025 08:30 IST

    பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

    பாஜகவின் வாக்குகள் திருட்டு அம்பலமானதால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்எனகர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

     



  • Aug 10, 2025 08:09 IST

    திருப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    2 நாள்சுற்றுப்பயணமாகதிருப்பூர்மாவட்டத்திற்குஸ்டாலின்இன்றுசெல்கிறார். ரூ.949 கோடியில்முடிவுற்ற 61 பணிகளைதொடங்கிவைத்து 20,000 பேருக்குநாளைநலத்திட்டஉதவிகளைவழங்கஉள்ளார்.

     



  • Aug 10, 2025 08:06 IST

    இன்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

    சென்னைகமலாலயத்தில்பாஜகமாநிலநிர்வாகிகள்கூட்டம்இன்றுகாலை 9 மணிக்குநடைபெறுகிறது. பாஜகதேசியபொதுச்செயலாளர்பி.எல். சந்தோஷ்தலைமையில்பாஜகபுதியநிர்வாகிகளோடுஆலோசனைநடைபெறஉள்ளது.

     



  • Aug 10, 2025 08:03 IST

    ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

    பெங்களூருவில்ஓட்டுநர்இல்லாதமெட்ரோரயில்சேவையைபிரதமர்மோடிஇன்றுதொடங்கிவைக்கிறார். பெங்களூருஆர்.வி.ரோடுநிலையத்தில்இருந்துபொம்மசந்திராவரைமெட்ரோரயில்சேவையைஇன்றுதொடங்கிவைக்கிறார்.

     



  • Aug 10, 2025 07:57 IST

    "உக்ரைன் இல்லாமல் அமைதியை எட்ட முடியாது"

    உக்ரைன் இல்லாமல் டிரம்ப் - புதின் நடத்தும் பேச்சுவார்த்தை முடிவுகள் மூலம் அமைதியை எட்ட முடியாது. உக்ரைனியர்கள் தங்களது நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பரிசாக வழங்க மாட்டார்கள் என ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறினார்



  • Aug 10, 2025 07:41 IST

    ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி

    பண்டிகை கால சலுகையாக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில், கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.



  • Aug 10, 2025 07:40 IST

    தனுஷுடன் காதல்? - மிருணாள் தாகூர் விளக்கம்

    நடிகர் தனுஷும் தானும் காதலித்து வருவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர் வதந்தியை பார்த்தால் சிரிப்புதான் வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Aug 10, 2025 07:39 IST

    முரசொலி தொடக்க நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    நெருப்பாறுகள்பலநீந்திதிமுகவின்மனசாட்சியாகதமிழ்நாட்டின்உரிமைக்குரலாகஒலிக்கும்முரசொலிக்குஅகவை 84. அரசியலில்தெளிவு, வரலாற்றில்ஆழம், இனஉணர்வில்தீரம், கலைஇலக்கியத்தில்செழுமைஎனச்செயல்படும்தலைவர்கலைஞரின்மூத்தபிள்ளையைவாழ்த்துகிறேன். இன்றையசெய்திகளைப்பதிவுசெய்துகருத்தாழமிக்ககட்டுரைகளால்சிந்தனையூட்டிநாளையவரலாற்றைஎழுதஉணர்வளிக்கும்முரசொலியின்பயணம்என்றென்றும்தொடரட்டும்என்றுவாழ்த்துதெரிவித்தார்.

     



  • Aug 10, 2025 07:35 IST

    ராமதாஸ் தலைமையில் இன்று மாநாடு

    வன்னியர்சங்கத்தின்மகளிர்பெருவிழாமாநாடுபூம்புகாரில்ராமதாஸ்தலைமையில்இன்றுநடைபெறுகிறது. அன்புமணிதலைமையில்பாமகபொதுக்குழுநேற்றுநடைபெற்றநிலையில்இன்றுமகளிர்மாநாடுநடைபெறஉள்ளது.

     



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: