/tamil-ie/media/media_files/uploads/2023/01/Leena-Manimekali-twt-1200.jpg)
பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை, தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இயக்குனர் லீனா மணிமேகலை மீது அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இயக்குனர் லீனா மணிமேகலையை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகுமாறும் அவரது டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை ரிட் மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
லீனாவின் வாதத்தை ஏற்ற உச்சநீதி மன்றம், அவருடைய மனு தொடர்பான வாதத்திற்கு டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்வதற்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.