கோவை: வீட்டின் காம்புவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கை விட்டு துலாவிய காட்டுயானை - சிசிடிவி வைரல்!

கோவையில், வீட்டின் காம்பவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு பொருளைத் தேடிய காட்டு யானையின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவையில், வீட்டின் காம்பவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு பொருளைத் தேடிய காட்டு யானையின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

author-image
Meenakshi Sundaram S
New Update
attack

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, கணுவாய், தாலியூர், பன்னிமடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர். 

Advertisment

இந்நிலையில் தடாகம் அடுத்த தாலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பழனிசாமி நாயக்கர் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் ஒருவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேடிச் சென்றது. தற்போது அதன் சிசிடிவி காட்சிகளும் வாழை மரங்களை சேதப்படுத்திய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Elephant covai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: