கோவையில் ஊருக்குள் உலாவும் யானை - விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

கோயம்புத்தூர் மாவட்டம் கதிர்நாயக்கன் பாளையத்தில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை சாப்பிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
யானை

ஊருக்குள் உலா வரும் காட்டியானை

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  

Advertisment

வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Advertisment
Advertisements

இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் நள்ளிரவில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று ஊருக்குள் உலா வந்தது. 

அப்போது வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானை வாழைகளை சாப்பிட்டுவிட்டு சென்றது அங்குள்ளவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். 

இவ்வாறு ஊருக்குள் வந்து வாழை உள்ளிட்டவற்றை காட்டுயானைகள் ருசி பார்த்தால் அடிக்கடி ஊருக்குள் வரும் எனவும் வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Elephant Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: