கோவை: இறைச்சிக் கழிவுகளுக்கு எதிராக வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை அகற்ற கோரியும் நடவடிக்கையும் எடுக்கக் கோரியும் கடிதம் அனுப்பினர்.

கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை அகற்ற கோரியும் நடவடிக்கையும் எடுக்கக் கோரியும் கடிதம் அனுப்பினர்.

author-image
WebDesk
New Update
2

அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவில், கோவை வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. சின்னியம்பாளையம் தபால் நிலையத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Advertisment

பள்ளி வளாகத்தில், விளையாட்டு மைதானத்தை ஒட்டி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதாகவும், மாணவர்கள் புகாரளித்துள்ளனர். இதற்கு முன்பு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து அஞ்சல் அட்டைகள் மற்றும் பதிவு கடிதங்களை அனுப்பி, அதிகாரிகள் தலையிட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தினர்.

மாணவர்களின் இந்த முயற்சி, குடிமைப் பொறுப்பின் வலுவான உணர்வையும், விரைவான நடவடிக்கைக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

covai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: