/tamil-ie/media/media_files/uploads/2021/06/Covaxin-4.jpg)
தமிழ்நாட்டில் சென்னை மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு சோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது. தடுப்பூசியின் இரண்டு அளவுகளின் செயல்திறன் குறைந்தது ஒன்பது மாதங்கள் நீடிக்கும் என்றும், பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட சோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் மார்ச் மாதத்தில் கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர். தற்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது.
மேலும், பகுப்பாய்வு இன்னும் செய்யப்படவில்லை ஆனால் பூஸ்டர் அளவுகள் இந்த தன்னார்வலர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று பரிசோதனையில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
தடுப்பூசி அளவைப் பெற்ற பல நபர்களில் ஆன்டிபாடிகள் நீடிக்கும் போது, சிலருக்கு தடுப்பூசியின் செயல்திறன் குறையலாம் மற்றும் ஆன்டிபாடிகள் 6-9 மாதங்களுக்கு மேல் நிலைக்காது என ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற தனிநபர்களுக்கு கோவாக்ஸின் மூன்றாவது டோஸின் விளைவை நிறுவ சோதனை நடத்தப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் திறமையானதா மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த அது உதவுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள சோதனை சிறிய அளவில் செய்யப்படுகிறது. ஒரு பெரிய மாதிரி அளவு கொண்ட மற்றொரு சோதனை சிறந்த முடிவுகளைப் பெற உதவியாக இருக்கும் தற்போது சோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை எந்தவொரு தன்னார்வலருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை, என்று அவர்கள் கூறினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.