தமிழகத்தில் 2வது கொரோனா பாதிப்பு உறுதி - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
Advertisment
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.
Advertisment
Advertisements
இதற்கு முன்பு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுறுத்தினார்.
தொடந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா அறிகுறி மற்றும் கரோனா பாதித்தவருடன் இருந்தவர்கள் என்று 2,984 பேர் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் உதவியுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படுவதாகக் கூறினார்.
இதுவரை, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"