Advertisment

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000 தாண்டியது

COVID-19 Chennai: 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
70 MMC PG doctors test positive

70 MMC PG doctors test positive

Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகததில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியதுள்ளது.

Advertisment

இதில் சென்னையில் கொரோனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தற்போதைய நிலவரப்படி பாதிப்பு 25, 000 தாண்டியுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இன்று (ஜூன்.10) மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய உயிரிழப்புகளில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,933 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூர் 105 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment