Advertisment

கல்லூரிகள், பள்ளிகள், எஸ்.பி அலுவலகம்... தமிழகத்தில் புதிதாக உருவான 6 கிளஸ்டர்கள்!

Tamilnadu state health department has tracked 6 clusters Tamil News: கடந்த நவம்பர் முதல் கல்லூரிகளில் இருந்து 3 கிளஸ்டர்கள், பள்ளிகளில் இருந்து இரண்டு மற்றும் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் ஒன்றை மாநில சுகாதாரத் துறை கண்காணித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Covid 19 Tamil News: TN health department has tracked 6 clusters

Tamilnadu news in tamil: தமிழக பொது சுகாதார இயக்குநரகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த நவம்பர் முதல் கல்லூரிகளில் இருந்து 3 கிளஸ்டர்கள், பள்ளிகளில் இருந்து இரண்டு மற்றும் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் ஒன்றை மாநில சுகாதாரத் துறை கண்காணித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை நாடுமுழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனால் 393 பேர் இறந்துள்ளனர் என்றும், 9,265 பேர் சிகிச்சையின் பலனாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,821 பேர் சிகிச்சைக்காக அனுமதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவையில் 3 பேர், சென்னையில் 2 பேர், சேலம், நாமக்கல், திருவள்ளூர், திருச்சி, நீலகிரி மற்றும் திருவாரூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

publive-image

தொற்று பாதிப்பை பொறுத்தவரை சென்னை (123), கோயம்புத்தூர் (110) ஆகிய இடங்களில் மூன்று இலக்கங்களிலும், இன்னும் 17 மாவட்டங்களில் மூன்று இலக்கங்களிலும் பதிவாகியுள்ளன. அரியலூர், பெரம்பலூர், தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களுடன் மற்ற 11 மாவட்டங்களை ஒப்பிடும்போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை எண்ணிக்கையுடன் தொற்று பரவல் ஓரளவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் தொற்றுப்பரவல் சராசரி 699ல் இருந்து 688 ஆக குறைந்துள்ளது என்றும், 739 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7,821 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கிளஸ்டர்கள் கண்காணிப்பு

தமிழக பொது சுகாதார இயக்குநரகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த நவம்பர் முதல் கல்லூரிகளில் இருந்து 3 கிளஸ்டர்கள், பள்ளிகளில் இருந்து இரண்டு மற்றும் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் ஒன்றை மாநில சுகாதாரத் துறை கண்காணித்துள்ளது.

மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் மற்றும் பெங்களூரில் உள்ள INSTEM இல் செய்யப்பட்ட மரபணு வரிசை பகுப்பாய்வு ஆய்வகத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நோயாளிகள் தடுப்பூசியின் டெல்டா மாறுபாட்டை எடுத்துச் சென்றதைக் காட்டுகிறது. "டெல்டா மாறுபாட்டுடனான எங்கள் போர் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. நெறிமுறைகளில் தொற்று பாதிப்பு மற்றும் கிளஸ்டர்களை அதிகரிக்கிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மக்கள்தொகை அடர்த்தியான நகரங்களில் புதிய வழக்குகள் குறைவதைக் குறிக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்,” என்று சுகாதார துறை செயலர் ஜே ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ள சுகாதார துறை செயலர் கண்காணிப்பு, சோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Covid 19 Covid 19 In India Covid 19 Second Surge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment