Advertisment

கொரோனா அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட்- மதுரை கிளையில் நெரிசலை குறைக்க அறிவுறுத்தல்

ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஹைப்ரிட் விசாரணையை மீண்டும் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
madras high court

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது.

Advertisment

இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஹைப்ரிட் விசாரணையை மீண்டும் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அரங்குகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் மக்கள் வருகையை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மற்றும் மதுரை பெஞ்சில் உள்ள முதன்மை இருக்கைகளில், ஹைபிரிட் முறையிலான விசாரணையை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

நேரில் ஆஜராகும் வக்கீல்கள் மற்றும் வழக்குரைஞர்கள் இந்த வசதியை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து அதிகார வரம்புகளிலும் இ-ஃபைலிங் வசதியைப் பயன்படுத்த வழக்கறிஞர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Covid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment