/indian-express-tamil/media/media_files/UCWO4ViHLHWCvmyA1dl4.jpg)
திருவொற்றியூரில் பெண்ணை மாடு முட்டி படுகாயம் ஏற்படுத்திய வழக்கில் மாட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். (படம் நன்றி தந்தி ட்விட்டர்)
சென்னை திருவொற்றியூரில் பெண்ணை முட்டி படுகாயம் ஏற்படுத்திய எருமை மாட்டின் உரிமையாளர்களான தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ், மகன் வெங்கல சாய் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து மாடுகளை வாங்கி வந்து கமிஷனுக்கு விற்பனை செய்யும் தொழிலில் கோடீஸ்வர ராவ் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மேலும், ஆந்திராவில் இருந்து வந்த மாடுகளை இறக்கும் போது தப்பியோடிய மாடு, மிரண்டு போய் பெண்ணை முட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் பெண் ஒருவரை எருமை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடத்தில் கடும் அச்சத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் மாட்டின் உரிமையாளர்களான தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us